போலீஸ் (காவலர்) தேர்வு: ஜூன் 20ல் 'ரிசல்ட்' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 6 June 2017

போலீஸ் (காவலர்) தேர்வு: ஜூன் 20ல் 'ரிசல்ட்'

போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள், வரும், 20ல் வெளியாக உள்ளன.

போலீஸ், சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள, காவலர் நிலையிலான, 15 ஆயிரத்து, 711 இடங்களை நிரப்ப, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், ஜன., 23ல் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, 50 திருநங்கையர் உட்பட, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, மே, 24ல், மாநிலம் முழுவதும், 410 மையங்களில் நடந்தது; 5.80 லட்சம் பேர் தேர்வு எழுதினர்; 52 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. சென்னையில், 56 தேர்வு மையங்களில், 41 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்த முடிவுகள், வரும், 20ல் வெளியாகலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

 போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கான்ஸ்டபிள், எஸ்.ஐ., என, பல்வேறு நிலைகளில், 20 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, மேலும், இரண்டாம் நிலை காவலர்கள் நிலையில், 5,000 பேரை தேர்வு செய்ய இருக்கிறோம்' என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot