பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க அவகாசம். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 27 June 2017

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க அவகாசம்.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு ஜூலை 3-ம் தேதிக்குள் பதிலளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கத் தலைவர் முகமது ஜலீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீத இடங்களையும், சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங் களில் 65 சதவீத இடங்களையும் அரசு கலந்தாய்வு மூலம் நிரப்புகிறது.

கலந்தாய் வில் நிரப்பப்படாத இடங்கள் கடைசி நேரத்தில் கல்லூரிகளுக்கு திருப்பி ஒப்படைக்கப்படுவதால் கல்லூரி களாலும் அந்த இடங்களை நிரப்ப முடியவில்லை.கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2016 வரை லட்சக்கணக்கான இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ளன. இதனால்தனியார் கல்லூரி களுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்படு கிறது.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 22 கல்லூரிகளை மூட விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கிடையிலான இடப்பகிர்வு விகிதாச்சாரத்தை மாற்ற வேண்டுமென அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று நடந்தது. அப்போது இதுதொடர்பாக பதிலளிக்க காலஅவகாசம் வழங்கக்கோரி அண்ணா பல்கலைக்கழகம் கோரியதை யடுத்து விசாரணையை நீதிபதி வரும் ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot