NEET : மாநில அளவில் கோவை மாணவர் முதலிடம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 23 June 2017

NEET : மாநில அளவில் கோவை மாணவர் முதலிடம்

நீட் தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவர் ஜி.எம்.முகேஷ் கண்ணா முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் நீட் தேர்வில் 720-க்கு 655 மதிப்பெண் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 260-ஆவது இடம் பெற்றுள்ளார்.

2015-ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வை முடித்த இவர், முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காததால், அதே ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தார். எனினும் முதலாமாண்டு முடித்ததும் பொறியியல் படிப்பைக் கைவிட்டு, நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த எனக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி தேர்வெழுதுவதற்கு பயிற்சி மையத்தில் பெற்ற பயிற்சிதான் உதவியது என்றார்.
சென்னை மாணவர்: தமிழக அளவில் இரண்டாவது இடத்தை சென்னை மாணவர் கே.ஆதித்யா பிரணவ் பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 648 மதிப்பெண்ணும், அகில இந்திய அளவில் 351-ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். தேர்வு முடிவு குறித்து அவர் கூறுகையில், ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத்தேர்வைக் காட்டிலும் நீட் தேர்வு எளிதாகவே இருந்தது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலானோர் தேர்வு எழுதியதால், என்னுடைய தரவரிசை குறைந்துவிட்டது என்றார்.
மூன்றாவது இடத்தை ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன் பிடித்துள்ளார். இவர் 646 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 391-ஆவது இடத்தையும், டி.ஆர்.ஜீவா என்ற மாணவர் 645 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 404-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot