போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள், இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டு உள்ளன. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 7 July 2017

போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள், இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலர்கள் என்ற நிலையில், காவல் துறைக்கு, 13 ஆயிரத்து, 137; சிறைத்துறைக்கு, 1,015, தீயணைப்பு துறைக்கு, 1,512, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு,
47 பின்னடைவு காலி பணியிடங்கள் என, மொத்தம், 15 ஆயிரத்து, 711 காலி பணியிடங்களுக்கு,ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்கு, ஜன., 23ல் அறிவிப்பு வெளியானது. இதில், மூன்றாம் பாலினம் என்ற பிரிவின் கீழ், திருநங்கையரும் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்தேர்வுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.இவர்களுக்கான எழுத்து தேர்வு, மே, 21ல், 32 மாவட்ட தலைநகரங்களில், 410 மையங்களில் நடந்தது. இதில், 4.82 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள், www.tnusrbonline.org என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றோருக்கு, இம்மாத இறுதியில், 15 மையங்களில், உடல் தகுதி தேர்வு மற்றும்உடல் திறன் போட்டிகள் நடக்க உள்ளன. மேற்கண்ட இணையதள முகவரியில், சேர்க்கை எண், பிறந்த தேதியை பதிவு செய்து, உடற்கூறு, உடல் திறன் போட்டிக்கான நுழைவு சீட்டை, ஜூலை, 12ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட மாட்டாது.

தோல்வி அடைந்தோர், இதே இணையதள முகவரியில் சேர்க்கை எண், பிறந்த தேதியை பதிவு செய்து, மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். உடல் தகுதி மற்றும் உடல் திறன் போட்டிக்கு, 1 : 5 என்ற வீதத்தில் அழைக்கப்பட்டு, தேர்வு செய்யப்படுவர் என, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot