"ஊதிய மாற்று அறிக்கை மீது அக்.15-க்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 24 September 2017

"ஊதிய மாற்று அறிக்கை மீது அக்.15-க்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபடி ஊதிய மாற்று அறிக்கையைப் பெற்று அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர் சங்க கூட்டுக் குழு மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறினார்.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்க கூட்டுக்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை குறித்தும், நீதிமன்ற வழக்குகள் குறித்தும், அரசின் அணுகுமுறை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஓய்வூதியம் இல்லாத அனைத்துத் துறைகளுக்கும், அரசுத்துறை சார்ந்த பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசின் அணுகுமுறை, நீதிமன்ற வழக்குகள், கோரிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும். மேலும், தமிழக முதல்வர் அறிவித்தவாறு ஊதியமாற்று அறிக்கையைப் பெற்று அறிக்கை மீது சங்கங்களை அழைத்துப் பேசி அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்திட வேண்டும்.

இதே கோரிக்கையுடன் ஓய்வூதியர்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்.அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், தோழமை சங்கங்களை ஒன்றிணைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பு உருவாக்கப்படும். அக். 15-ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், திருச்சியில் அக். 14-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜாக்டோ-ஜியோ மாநில பேரவை கூட்டத்தில் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்என்றார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot