ஜாக்டோ - ஜியோ மீண்டும் நாளை முதல் போராட்டம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 9 September 2017

ஜாக்டோ - ஜியோ மீண்டும் நாளை முதல் போராட்டம்

''அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம், நாளை முதல் மீண்டும் துவங்கும்,'' என, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிர
மணியன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
ஆனால், கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதனால், ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு கூடி, ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கைகளுடன், தற்போது, 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்
பதையும் இணைத்து, 11ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

அன்று அனைத்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்; 12ம் தேதி மறியல்; அதன்பின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
போராட்டத்தோடு நீதிமன்ற வழக்கையும் சந்திப்போம். 28 ஆசிரியர்கள் சங்கம், 64 அரசு ஊழியர் சங்கம் என, மொத்தம், 92 சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot