'நீட்' தேர்வின் முக்கியத்துவம் : மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 11 September 2017

'நீட்' தேர்வின் முக்கியத்துவம் : மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'

'நீட்' போராட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ' போராட்டம், 'நீட்' தேர்வுக்கு எதிராக சில அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் என, அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது தவிர, அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையும், கூடுதல் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. 'நீட்' போராட்டத்தில் இருந்து, மாணவர்களை விலக்கி, அவர்களுக்கு முறையாக வகுப்பு களை நடத்த, தலைமை ஆசிரியர்கள் வழியே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'நீட்' போராட்டத்தில் பெரும்பாலும், அரசு பள்ளி மாணவர்களே பங்கேற்று உள்ளனர். தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்கா மல், படிப்பில் கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் தான், மருத்துவப் படிப்புகளில், பல ஆண்டுகளாக, பெரும்பாலான இடங்களை பெறுகின்றனர். இதை சுட்டிக்காட்டி, அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.அரசு பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, நீட், ஜே.இ.இ., போன்ற தேர்வுகள் எழுதுவதால், நாடு முழுவதும், மருத்துவ இடத்தை பெற முடியும். அதற்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.


பள்ளிகள் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். மாறாக, போராட்டத்திற்கு சென்றால், பிளஸ் 2 தேர்ச்சி பெறுவது கூட கடினமாகி, எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என, ஆலோசனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், நீட், ஜே.இ.இ., பயிற்சியில் தீவிர ஆர்வம் காட்டுவது போல், அரசு பள்ளி மாணவர்களும்ஆர்வம் காட்ட வேண்டும் என, உளவியல் ஆலோசனை அளிக்கப்படஉள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot