3 மொழிகள் பாட திட்டத்தில் வெளிநாட்டு மொழி கிடையாது - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 8 October 2017

3 மொழிகள் பாட திட்டத்தில் வெளிநாட்டு மொழி கிடையாது

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில் உள்ள, மூன்று மொழி பாடத் திட்டத்தில், புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.அதன்படி, மூன்று மொழி பாடத்திட்டத்தில் வெளிநாட்டு மொழிகள் இனி இடம்பெறாது.
மூன்று மொழி பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள மாற்றங்கள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உயரதிகாரிகள் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், மூன்று மொழி பாடத்திட்டம் உள்ளது. அதன்படி, ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை தவிர, மூன்றாவது மொழியும், ஹிந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலத்தை தவிர, மூன்றாவது மொழியும் கற்றுத் தரப்படுகின்றன.மாணவர்கள் தாய்மொழியைத் தவிர, மற்றொரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஆனால், பல்வேறு பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.அதனால், ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஹிந்தி, ஆங்கிலத்தைத் தவிர, இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை மூன்றாவது மொழிப் பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஹிந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலத்தை தவிர, மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்றுத் தரப்படும்.பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை, விருப்ப பாடமாக கற்றுத் தரலாம். தற்போது, எட்டாம் வகுப்பு வரை உள்ள மூன்று மொழி பாடத்திட்டத்தை, 10 ம்வகுப்பு வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல், இது நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot