கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு 79,842 பேர் பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி
தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கும்.
நிகழாண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (மே 26) முடிவடைந்தது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 9 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளிகள் தவிர) நுழைவுநிலை வகுப்புகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 126 இடங்கள் உள்ளன.
வெள்ளிக்கிழமை கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 79,842 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் மே 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி
தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கும்.
நிகழாண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (மே 26) முடிவடைந்தது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 9 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளிகள் தவிர) நுழைவுநிலை வகுப்புகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 126 இடங்கள் உள்ளன.
வெள்ளிக்கிழமை கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 79,842 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் மே 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment