தனியார் பள்ளிகளை போல, அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையும், ’பளீச்’ நிறத்தில், காட்சிக்கு அழகாக இருக்கும்படி, மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 861 அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இங்கு, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், மாணவியருக்கு மெரூன் நிறத்தில், பாவடை, சட்டையும், மாணவர்களுக்கு, கால்சட்டை, மேல்சட்டையும்,சீருடையாக உள்ளது.இதுதவிர, 261 நடுநிலைப்பள்ளிகள், 197 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு, சுடிதாரும், மாணவர்களுக்கு, பேண்ட், சட்டையும் சீருடையாக அளிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு நான்கு ’செட்’ சீருடை வழங்கப்படுகிறது. இதைஅணியும் ஒரு மாதத்திற்குள், ’வெளிரிய’ நிறத்தில், பழையசீருடை போல காட்சியளிக்கிறது.தனியார் பள்ளிகளில், காட்சிக்கு அழகாக இருக்கும் படியாக, கோடு, கட்டம் போட்ட சீருடை அளிக்கப்படுவதால், மாணவர்கள் தனித்தன்மையுடன் தெரிகின்றனர். இதைபோல, அரசுப்பள்ளி சீருடையிலும் மாற்றம் செய்ய வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.ஒருங்கிணைந்த பெற்றோர் மாணவர் நலசங்க மாநில பொதுசெயலாளர் சரவணவேல் கூறுகையில், ”அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் சீருடை தரமற்றதாகஉள்ளது.
மற்றவர்களுடன் பழக, அரசுப்பள்ளி மாணவர்கள் தயங்குகின்றன.எனவே, அடுத்த கல்வியாண்டு முதல், தரமான துணியில், தனியார் பள்ளி மாணவர்கள் அணிவது போல, புதுமையான டிசைன்களில், சீருடை அளித்தால், மாணவர்கள் பயனடைவர்,” என்றார்.
கோவை மாவட்டத்தில், 861 அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இங்கு, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், மாணவியருக்கு மெரூன் நிறத்தில், பாவடை, சட்டையும், மாணவர்களுக்கு, கால்சட்டை, மேல்சட்டையும்,சீருடையாக உள்ளது.இதுதவிர, 261 நடுநிலைப்பள்ளிகள், 197 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு, சுடிதாரும், மாணவர்களுக்கு, பேண்ட், சட்டையும் சீருடையாக அளிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு நான்கு ’செட்’ சீருடை வழங்கப்படுகிறது. இதைஅணியும் ஒரு மாதத்திற்குள், ’வெளிரிய’ நிறத்தில், பழையசீருடை போல காட்சியளிக்கிறது.தனியார் பள்ளிகளில், காட்சிக்கு அழகாக இருக்கும் படியாக, கோடு, கட்டம் போட்ட சீருடை அளிக்கப்படுவதால், மாணவர்கள் தனித்தன்மையுடன் தெரிகின்றனர். இதைபோல, அரசுப்பள்ளி சீருடையிலும் மாற்றம் செய்ய வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.ஒருங்கிணைந்த பெற்றோர் மாணவர் நலசங்க மாநில பொதுசெயலாளர் சரவணவேல் கூறுகையில், ”அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் சீருடை தரமற்றதாகஉள்ளது.
மற்றவர்களுடன் பழக, அரசுப்பள்ளி மாணவர்கள் தயங்குகின்றன.எனவே, அடுத்த கல்வியாண்டு முதல், தரமான துணியில், தனியார் பள்ளி மாணவர்கள் அணிவது போல, புதுமையான டிசைன்களில், சீருடை அளித்தால், மாணவர்கள் பயனடைவர்,” என்றார்.
Sir, ஆதார் அட்டை முக்கியம், முக்கியம்னு விளம்பரத்தை செலவுசெய்து மக்களை அலையவிட்ட அரசு, அந்த அட்டைய வைச்சு ஒருவருடைய (அது எவ்வளவு பெரிய தலைவராக நாட்டின் முதல் குடிமகனாக இருந்தாலும், ரசு அரசியல்வாதியாக இருந்தாலும், அரசுஊழியராக இருந்தாலும், சாதாரண கைடைநிலை உழைப்பாளியாக இருந்தாலும்) வருமானம், சொத்து மதிப்பை கணக்கிட்டு, அரசின் சலுகை சேர வேண்டிய சாமானியரை அடையும் படி செய்ய வேண்டியது அரசின் வேலை தானே??? " . அப்படிச் செய்தாலே தரமான பொருட்களை சேர வேண்டியவர்களைச் சென்றடையும். ஆனால் தனிமனிதனுடைய வருமானம் 1 சொத்து விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் படி வெளிப்படைத் தன்மையுடன் இணையத்தில் அறிந்து கொள்ளும் படி இருக்க வேண்டும்.
ReplyDelete