உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் ஒத்திவைப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 22 May 2017

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும், இன்று நடக்கவிருந்த, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணிக்கான, பதவி உயர்வு கவுன்சிலிங், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், கடந்த 19ல் துவங்கியது.
உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு, இன்று நடக்கவிருந்த கவுன்சிலிங், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்காலிகமாக ஒத்தி வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை ஐகோர்ட்டில், வழக்கு குறித்த தீர்ப்பு வெளியாகும் வரை, பதவி உயர்வு கலந்தாய்வு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், இப்பதவிக்கான, கவுன்சிலிங் நடக்கவிருக்கும் தேதி, பின் அறிவிக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:பட்டதாரி ஆசிரியர்கள், பணி மூப்பு அடையும் முன், தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால், 2008ல், சிலர் உயர் நீதிமன்றத்தை நாடினர். பள்ளிக்கல்வித் துறை சார்பில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து, வழக்குகளை
விரைந்து முடிக்க வேண்டும். ஜூன் இறுதிக்குள், காலியாக உள்ள, 250 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், பதவி உயர்வால் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot