பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு 'தத்கல்' விண்ணப்பம் இன்று துவக்கம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 7 June 2017

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு 'தத்கல்' விண்ணப்பம் இன்று துவக்கம்

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு, தத்கல் முறையில், இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜூனில் நடக்கவுள்ள, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காவிட்டால், 'தத்கல்' முறையில், சிறப்பு கட்டணத்துடன் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், பெயரை பதிவு செய்ய வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலையும்; தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து பங்கேற்காதவர்கள், ஹால் டிக்கெட்டையும், விண்ணப்பிக்கும் அலுவலரிடம் காட்ட வேண்டும்.இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள், திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலுார், வேலுார் மற்றும் சென்னையில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டும், தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.10ம் வகுப்புக்கும் விண்ணப்பம் : இதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், தத்கல் சிறப்பு கட்டண திட்டத்தில் விண்ணப்பிக்க, அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதோர் மற்றும் விண்ணப்பித்து தேர்வை எழுத முடியாதோர், ஜூனில் நடக்கும் சிறப்பு துணை தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, தத்கல் சிறப்பு கட்டணத்துடன், இன்றும், நாளையும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot