தேசிய பணிவாய்ப்பு சேவை மையத்தின் சென்னை பிரிவு, வேலை தேடும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘ஒ’ நிலை கணினி பயிற்சி (வன்பொருள் கையாளும் பயிற்சி) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி ஒரு ஆண்டு அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 18-30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 31-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்க இருக்கிறது. விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களுக்கு துணை பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பிரிவினர்களுக்கான தேசிய பணிவாய்ப்பு சேவை மையம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600 004 என்ற முகவரியை அல்லது 044-24615112 என்ற தொலைபேசி எண்ணையோ அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி ஒரு ஆண்டு அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 18-30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 31-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்க இருக்கிறது. விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களுக்கு துணை பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பிரிவினர்களுக்கான தேசிய பணிவாய்ப்பு சேவை மையம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600 004 என்ற முகவரியை அல்லது 044-24615112 என்ற தொலைபேசி எண்ணையோ அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment