குரூப்-4 தேர்வில் அடங்கிய இளநிலை உதவியாளர் பணிக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 17 முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் அடங்கிய இளநிலை உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு கடந்த 06.11.2016 அன்று எழுத்துத்தேர்வு நடைபெற்றது.தேர்வு முடிவு 21.02.2017 அன்று வெளியிடப்பட்டது. காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 17 முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை (அரசு பொது விடுமுறை நாட்கள் நீங்கலாக) சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில்நடைபெறும்.
கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு எஸ்எம்எஸ், இ-மெயில் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமாக தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீடு, காலியிடம் ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாகஉரிமம் கோர இயலாது. கலந்தாய்வுக்கு குறித்த நேரத்தில் வரத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது'' என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் அடங்கிய இளநிலை உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு கடந்த 06.11.2016 அன்று எழுத்துத்தேர்வு நடைபெற்றது.தேர்வு முடிவு 21.02.2017 அன்று வெளியிடப்பட்டது. காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 17 முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை (அரசு பொது விடுமுறை நாட்கள் நீங்கலாக) சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில்நடைபெறும்.
கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு எஸ்எம்எஸ், இ-மெயில் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமாக தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீடு, காலியிடம் ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாகஉரிமம் கோர இயலாது. கலந்தாய்வுக்கு குறித்த நேரத்தில் வரத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது'' என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment