- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 18 July 2017


 நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல்

பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம்   வழங்குதல் துவக்க விழா 

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.





  நிகழ்ச்சியில்  பள்ளி மாணவர் ரஞ்சித் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் மாணவர்களுக்கு  நிலவேம்பு குடிநீர் கசாயத்தை மாணவர்களுக்கு  வழங்கினார் . தேவகோட்டை நகராட்சி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளது.பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே வரும் முன் காக்கும் வகையில் இந்த நிலவேம்பு குடிநீர் கசாயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பல்வேறு முக்கிய நோய் பதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.மருந்து குடிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் இதன் பலன்கள் அதிகம்.பள்ளி மாணவர்கள் சுமார் 15 மி.லி .குடித்தால் போதுமானது. மாணவர்கள் அனைவருக்கும்,ஆசிரியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவ,மாணவியர்க்கு நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்கினார்.

 

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot