அண்மையில் நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 3.66 சதவீதம் பேரும், இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 6.71 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படிஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாய மாக்கப்பட்டுள்ளது.இதுவரையில் 3 தகுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக் குப் பிறகு 4-வது தகுதித் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.இடைநிலை ஆசிரியர்களுக் கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 2 லட்சத்து 41ஆயிரத்து 555 பேர் எழுதினர். மறுநாள் நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை (தாள்-2) 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பிஎட் பட்டதாரிகள் எழுதினார்கள்.இந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி இரவு வெளியிடப்பட்டன. அதன்படி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 6.71 சதவீதம் பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் 3.66 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றி ருப்பது தெரிய வந்துள்ளது. ‘டெட்’ தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது.
தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் விரும்பினால் மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ள ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானா லும் ‘டெட்’ தேர்வெழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுப் பிரிவினர் தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு 90 எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய இடஒதுக்கீட்டுப்பிரிவினர் எனில் 82 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படிஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாய மாக்கப்பட்டுள்ளது.இதுவரையில் 3 தகுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக் குப் பிறகு 4-வது தகுதித் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.இடைநிலை ஆசிரியர்களுக் கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 2 லட்சத்து 41ஆயிரத்து 555 பேர் எழுதினர். மறுநாள் நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை (தாள்-2) 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பிஎட் பட்டதாரிகள் எழுதினார்கள்.இந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி இரவு வெளியிடப்பட்டன. அதன்படி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 6.71 சதவீதம் பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் 3.66 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றி ருப்பது தெரிய வந்துள்ளது. ‘டெட்’ தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது.
தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் விரும்பினால் மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ள ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானா லும் ‘டெட்’ தேர்வெழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுப் பிரிவினர் தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு 90 எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய இடஒதுக்கீட்டுப்பிரிவினர் எனில் 82 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment