தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 11 August 2017

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.

 துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. முதல் 6 இடங்களை சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்தவர்கள் பெற்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 பதவிகள் அடங்கிய பணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26 துணை சூப்பிரண்டுகள், 21 வரித்துறை உதவி ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்கு கடந்த வருடம் முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வை 2½ லட்சம் பேர் எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 926 பேர் பங்கேற்றனர். முதன்மை தேர்வு முடிவு மே 12-ந்தேதி வெளியானது. இதில் 148 பேர் தேர்வு ஆனார்கள். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு சென்னை பிராட்வே அருகில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது. முதன்மை தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் களை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில் முதல் 6 இடங்களை பெருநகர சென் னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர் கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

 அவர்களின் பெயர் விவரங் கள் வருமாறு:- 1. காயத்ரி சுப்பிரமணியன், மாங்காடு. 2. பி. மணிராஜ், திருவொற்றியூர். 3. டி.தனப்பிரியா, நாமக் கல். 4. சுரேந்திரன், தேனி. 5. ஸ்ரீதேவி, நாமக்கல். 6. ஜெகதீசுவரன், டி.கல்லுப்பட்டி. இவர், செங்கல்பட்டு சப்-கலெக்டர் ஜெயசீலன் தம்பி ஆவார். ஜெயசீலனும் மனிதநேய மையத்தில் படித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவசமாக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot