முக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தேவையில்லை - உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 25 September 2017

முக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தேவையில்லை - உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன்.

''தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும்,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில், 2012 - 2014 வரையிலான, அறிவியல் அறிஞர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை, அண்ணா பல்கலையில், நேற்று நடந்தது. இதில், 29 அறிவியல் அறிஞர்களுக்கு, விருதுகள் வழங்கி, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் பேசினார்.
பின், நிருபர்களிடம் கூறியதாவது:

பொறியியல் கலந்தாய்வு, 'ஆன் - லைன் 'முறையில் நடத்தப்படும். பொறியியல் படிப்பில், 'நீட்' தேர்வு வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலை மாணவர்கள், தங்களின் சான்றிதழ்கள் தொலைந்தால், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். இரண்டு நாட்களில், நகல் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது. ஒரு பல்கலையில் இருந்து, பிற பல்கலையில் சேர இடப்பெயர்வு சான்றிதழ் பெற தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot