தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. தாம்பரத்தில் நடைபெற்ற தேர்வில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றில் புதிய விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன்படி, நேற்று போட்டித் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்காக 84 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு காஞ்சி மாவட்டத்தில் சி.எஸ்.ஐ. கார்லி பள்ளி, ஜெயகோபால் கரோடியா உள்ளிட்ட 12 மையங்களில் நடந்தது. மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்த 4,644 பேரில் 3,531 பேர் தேர்வு எழுதினர். தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.திருவளர்செல்விதலைமையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இவற்றில் புதிய விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன்படி, நேற்று போட்டித் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்காக 84 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு காஞ்சி மாவட்டத்தில் சி.எஸ்.ஐ. கார்லி பள்ளி, ஜெயகோபால் கரோடியா உள்ளிட்ட 12 மையங்களில் நடந்தது. மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்த 4,644 பேரில் 3,531 பேர் தேர்வு எழுதினர். தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.திருவளர்செல்விதலைமையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.