அடுத்த மாதமே ஜாக்டோ ஜியோ வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 24 October 2017

அடுத்த மாதமே ஜாக்டோ ஜியோ வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும்

23.10.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்த ஜாக்டோ ஜியோ வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக காரணங்களால் அடுத்த வாரம்தான் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்ய மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் நாளை முதல் வெள்ளி வரை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைகள் மேற்கொள்வதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர் சசிதரன் அவர்களும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள நீதியரசர் சுவாமிநாதன்அவர்களும் இணைந்த அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களின் நிர்வாக உத்தரவை பெற தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எனவே அடுத்த வாரத்தில்தான் ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை தேதி தெரியவரும்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot