10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தேர்வுமுடிவுகளை பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப திட்டம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 10 May 2018

10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தேர்வுமுடிவுகளை பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப திட்டம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்1, 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு நோட்டீஸ் போர்டில் ஒட்டுவதற்கான நடைமுறையை பின்பற்ற அரசுத் தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் துறை பள்ளிகளுக்கு சிடி வழங்கி நோட்டீஸ் போர்டில் தேர்வுமுடிவுகளை ஒட்டுதல், செய்தித்தாளில் பிரசுரம் செய்தல், இணையதளங்களில் வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வெளியிட்டு வந்தது.

அதைத்தொடர்ந்து, மாணவர்கள் அளித்துள்ளசெல்போன் எண்களுக்கு, தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் நடைமுறையும் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை பள்ளிகளில் ஒட்டும் நடைமுறையையும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி இந்த ஆண்டு இணையதளம், எஸ்எம்எஸ் தவிர இ-மெயில் மூலமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவு வெளியாகும் நேரத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும், அந்த பள்ளியில் படித்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இ-மெயில் மூலம் அனுப்பப்படும். அவற்றை பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் ஒட்ட உத்தரவிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot