பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான் : 1200க்கு குட்பை சொன்னது பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 19 May 2018

பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான் : 1200க்கு குட்பை சொன்னது பள்ளிக்கல்வித்துறை

பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை மறுநாள் 21ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 1978ம் ஆண்டு 2 ஆண்டுகள் கொண்ட மேல்நிலைப்படிப்பு செயல்பாட்டுக்கு வந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் 6 பாடங்கள் என்ற நிலையில் பிரதான பாடத்தை கொண்டு பிரிவு அடையாளப்படுத்தப்பட்டது. 6 பாடங்களுக்கு தலா 200 மதிப்பெண்கள் என 1200 மதிப்பெண்கள் என்று மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பெண் முறை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு பிரதானப்படுத்தப்படுவதால் பிளஸ்1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிளஸ்1 வகுப்பில் ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என்பதை மாற்றி 100 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டது.

அதேபோல் பிளஸ்2 வகுப்பிலும் ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என்று 600 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையை வரும் 201819ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் பிளஸ்2க்கு மட்டும் தனியாக மதிப்பெண் சான்றிதழ் என்பதை மாற்றி பிளஸ்1க்கு என்று தனியாகவும், பிளஸ்2க்கு என்று தனியாகவும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். முடிவில் இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot