மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்: தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 17 May 2017

மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்: தமிழக அரசு அறிவிப்பு.

பிளஸ் 2 முடித்து அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்த அரசின் வழிகாட்டுதலை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வேலைவாய்ப்பு - பயிற்சித் துறை இயக்குநர் என்.சுப்பையன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் தற்போது தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக செயல்பட்டு வருகின்றன.
மேலும் இம்மையங்கள் மூலமாக மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பிளஸ் 2 வகுப்புக்குப் பிறகு அடுத்து என்ன படிக்கலாம், உயர் கல்வி குறித்த தகவல்கள் மற்றும் மேற்படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்த ஆலோசனை, தனிநபர் வழிகாட்டுதல்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வரும் 18 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மேல்குறிப்பிட்ட நாள்களில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி உரிய ஆலோசனைகளைப் பெறலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்
டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot