அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,இனி தினமும் காலையில் பள்ளி துவங்கும் முன், பிரார்த்தனை கூட்டம்,புதிய விதிகள் உருவாக்கம். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 10 May 2017

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,இனி தினமும் காலையில் பள்ளி துவங்கும் முன், பிரார்த்தனை கூட்டம்,புதிய விதிகள் உருவாக்கம்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் முன், பிரார்த்தனை கூட்டம், மைதானத்தில் நடத்தப்படும். பல ஆண்டுகளாக, பின்பற்றப்பட்டு வந்த இந்த வழக்கம், ஐந்து ஆண்டுகளாக, நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும், திங்கள் முதல் வெள்ளி வரை, தினமும் கூட்டு பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்காக, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கூட்டு பிரார்த்தனையுடன், அனைத்து பள்ளிகளிலும், தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் கட்டாயமாக்கப்படுகிறது.

2 comments:

  1. பிரார்தனையெல்லாம் நல்லதுதான். ஆனா அது அனைத்து மதத்தினருக்கும் பொது வானதாக இருக்க வேண்டும்.
    தமிழர்களுக்கு இந்து என்ற அடையாளம் கிடையாது என்பதை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்தே நினைவிலும், மனதிலும் கொள்ள வேண்டும்.
    அதற்கு முன் அனைத்துப் பள்ளிகளிலும் மைதானம் என்ற ஒன்று கட்டாயம் இருக்கின்றதா? என்பதை சரி பார்த்து, எதைச் செய்தாலும் அது அனைத்து தட்டு மக்களுக்கும் சமமாகவும், எந்த வேறுபாடுகள் இன்றியும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கின்றதா? என்பதையும் சரிபார்த்து, அது தொடர்ச்சியாக நடைபெற்று பழக்கமாக மாறும் வரை கண்காணித்து பயனுள்ளதாக செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. Pet.teacher.must appointment all schools? ????

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot