தமிழக அஞ்சல் துறை தேர்வு ரத்தும் தமிழக அரசியல் தலைவர்களும் மீடியாக்களும்... - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 20 May 2017

தமிழக அஞ்சல் துறை தேர்வு ரத்தும் தமிழக அரசியல் தலைவர்களும் மீடியாக்களும்...

தமிழகத்தில் நடந்த அஞ்சல் துறை தெர்வில் முறைகேடு நடந்துள்ளது ஹரியானவை செர்தவர்கள் எப்படி தமிழில் அதிக மதிப்பெண் எடுத்து பாஸ் செய்யலாம், இதனால் தமிழக மாணவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது தமிழ்கத்தில் வடநாட்டினர் ஆதிக்கம் மத்திய அரசு பணிகளில் உள்ளது என்று பொங்கி அறிக்கை கொடுத்தார்கள்.
நல்ல விஷயம் தான். இப்போதுதான் இதெல்லாம் அவர்களின் கண்களுக்குத் தெரிகிறதா? 10 பேர் சேர்ந்து தேர்வில் மோசடி செய்துள்ளார்கள் இதற்கு தேர்வுத்துறையில் உள்ளவர்களும்சேர்ந்துதான் உடந்தையாக இருந்துள்ளார்கள்  இருக்கிறார்கள்  என்பது வெளிப்படையாக தெரிகிறது.தேர்வில் ஒரு மாணவன் காப்பி அடித்து மாட்டிகொண்டால் அவனை மட்டும்தான் இடைநீக்கம் செய்யமுடியும் அதுதான் முறை ஆனால் அஞ்சல்துறைதேர்வில் தேர்வு முடிவு முழுவதையும்  ரத்து செய்து விட்டார்கள். இதனால் நிறைய தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக தலைவர்களின் அறிக்கைக்கு மரியாதை கொடுத்து தேர்வை ரத்து செய்துவிட்டார்கள் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் தேர்வுத்துறையில் உள்ளவர்களின் தவறை மறைக்கவே இப்படி செய்துள்ளார்கள். இது குறித்து தேர்வுத்துறை பதிலளிக்க வேண்டும். தமிழக தலைவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். தமிழகத்தில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாலிறது.

தேர்வில் மோசடி என்றவுடன்  முண்ணனி நாளிதழ்கள் தலையங்கம் தீட்டின. ஆனால் தேர்வு ரத்தானது பற்றி வாய்திறக்க மறுக்கின்றன. இது முறையல்ல.தமிழக பத்திரிக்கைகள் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்பதே தேர்வில் வெற்றி பெற்றவர்களீன் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot