தமிழகத்தில் 15 லட்சம் பெண்களுக்கு இலவச சமையல் 'காஸ்' சிலிண்டர். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 8 July 2017

தமிழகத்தில் 15 லட்சம் பெண்களுக்கு இலவச சமையல் 'காஸ்' சிலிண்டர்.

தமிழகத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, 15 லட்சம் பெண்களுக்கு, இலவச, 'காஸ்' சிலிண்டர்கள் வழங்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முன்வந்துள்ளன
.மத்திய அரசின், 'பிரதம மந்திரி உஜ்வாலா' திட்டத்தில், நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும், ஐந்து கோடி குடும்பங்களுக்கு, இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தை, பிரதமர் மோடி, 2016ல் துவக்கி வைத்தார். 'உஜ்வாலா' திட்டத்தில், ஒவ்வொரு பயனாளிக்கும், 'டிபாசிட்' கட்டணம், 1,250 ரூபாய் இன்றி, ரெகுலேட்டர், 150 ரூபாய்; ரப்பர் குழாய், 100 ரூபாய்; காஸ் புக், 25 ரூபாய்.ஆய்வு, பொருத்துதல் கட்டணம், 75 ரூபாய் என, மொத்தம், 1,600 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன.990 ரூபாய் மதிப்புள்ள அடுப்பும், 574 ரூபாய் சிலிண்டரும், கடனாக தரப்படுகிறது.இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:உஜ்வாலா திட்டத்தின் கீழ், சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் பெயரில், காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில், அடுப்புமற்றும் சிலிண்டர் கட்டணத்தை, காஸ் மானியத்தில் கழித்து கொள்ளும் வசதி உள்ளது.அதனால், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம், ஒரு ரூபாய் கூட வாங்காமல், காஸ் இணைப்பு தரப்படுகிறது.தமிழகத்தில், 15 லட்சம் பயனாளிகளுக்கு, இலவச சிலிண்டர் வழங்கப்பட உள்ளது.

அவர்களின்பெயர் பட்டியல், காஸ் ஏஜன்சிகளிடம் உள்ளன.செப்டம்பர், 2016 சிலிண்டர் இணைப்பு வினியோகம் துவங்கினாலும், தற்போது தான்,அது குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் அதிகரித்துள்ளது.இதுவரை, 3.20 லட்சம் பேருக்கு, இலவச சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள், அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot