'பி.ஆர்க்., படிப்புக்கு, தமிழக அரசு நுழைவுத்தேர்வு நடத்தினால், மத்திய அரசின், நாட்டா தேர்வு எழுதியோர் பாதிக்கப்படுவர்' என, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பி.ஆர்க்., படிப்பில் சேர, தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் நடத்தும், 'நாட்டா' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 53 கல்லுாரிகளில், இந்த ஆண்டும், சென்ற ஆண்டிலும், நாட்டா நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம் என, அறிவிக்கப்பட்டது. இதேபோல், 'மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., நடத்திய, ஜே.இ.இ.,தேர்வில், ஆர்கிடெக்சர் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களும், பி.ஆர்க்., கல்லுாரிகளில் சேரலாம்' என, தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்தது.தமிழக அரசின் உயர்கல்வித்துறை, இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், ஜே.இ.இ., மாணவர்கள், அண்ணா பல்கலையின், பி.ஆர்க்., கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, இரண்டு பேரின் விண்ணப்பங்களை மட்டும், அண்ணா பல்கலை ஏற்றது. இந்த ஆண்டு, நாட்டா நுழைவு தேர்வில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதால், மிகக்குறைந்த மாணவர்களே, தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால், பி.ஆர்க்., கவுன்சிலிங்குக்கு, 2,800 இடங்களுக்கு, வெறும், 1,707 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். பி.ஆர்க்., கவுன்சிலிங், ஆக.,19ல் நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
'அதற்கு முன், தமிழக அரசின் சார்பில், நாட்டா போல், மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும்; பிளஸ் 2 மாணவர்கள் இதில் பங்கேற்று, பி.ஆர்க்., படிப்பில் சேரலாம்' என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதற்கு பெற்றோர்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: நாடு முழுவதும், நாட்டா அல்லது ஜே.இ.இ., மதிப்பெண் படி மட்டுமே, பி.ஆர்க்.,படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு, நாட்டா மற்றும் ஜே.இ.இ., தேர்வு களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், ஜே.இ.இ., தேர்வை ஏற்க மறுத்த தமிழக அரசு, புதிய நுழைவுத் தேர்வை நடத்துவோம் என, அறிவித்திருப்பது தமிழக அரசின் கொள்கைக்கும் முரணானது. புதிதாக தேர்வு நடத்துவதால், ஏற்கனவே, நாட்டாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். தேசிய ஆர்கிடெக்சர் அறிவிப்புக்கும், விதிகளுக்கு மாறாக, மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தக்கூடாது. இதுகுறித்து, நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பி.ஆர்க்., படிப்பில் சேர, தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் நடத்தும், 'நாட்டா' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 53 கல்லுாரிகளில், இந்த ஆண்டும், சென்ற ஆண்டிலும், நாட்டா நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம் என, அறிவிக்கப்பட்டது. இதேபோல், 'மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., நடத்திய, ஜே.இ.இ.,தேர்வில், ஆர்கிடெக்சர் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களும், பி.ஆர்க்., கல்லுாரிகளில் சேரலாம்' என, தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்தது.தமிழக அரசின் உயர்கல்வித்துறை, இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், ஜே.இ.இ., மாணவர்கள், அண்ணா பல்கலையின், பி.ஆர்க்., கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, இரண்டு பேரின் விண்ணப்பங்களை மட்டும், அண்ணா பல்கலை ஏற்றது. இந்த ஆண்டு, நாட்டா நுழைவு தேர்வில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதால், மிகக்குறைந்த மாணவர்களே, தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால், பி.ஆர்க்., கவுன்சிலிங்குக்கு, 2,800 இடங்களுக்கு, வெறும், 1,707 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். பி.ஆர்க்., கவுன்சிலிங், ஆக.,19ல் நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
'அதற்கு முன், தமிழக அரசின் சார்பில், நாட்டா போல், மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும்; பிளஸ் 2 மாணவர்கள் இதில் பங்கேற்று, பி.ஆர்க்., படிப்பில் சேரலாம்' என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதற்கு பெற்றோர்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: நாடு முழுவதும், நாட்டா அல்லது ஜே.இ.இ., மதிப்பெண் படி மட்டுமே, பி.ஆர்க்.,படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு, நாட்டா மற்றும் ஜே.இ.இ., தேர்வு களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், ஜே.இ.இ., தேர்வை ஏற்க மறுத்த தமிழக அரசு, புதிய நுழைவுத் தேர்வை நடத்துவோம் என, அறிவித்திருப்பது தமிழக அரசின் கொள்கைக்கும் முரணானது. புதிதாக தேர்வு நடத்துவதால், ஏற்கனவே, நாட்டாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். தேசிய ஆர்கிடெக்சர் அறிவிப்புக்கும், விதிகளுக்கு மாறாக, மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தக்கூடாது. இதுகுறித்து, நீதிமன்றத்தின் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment