பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள் துவக்கம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 29 August 2017

பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள் துவக்கம்

தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, செப்., ௧ல் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு, அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில், ௮௯ ஆயிரம் பேர்,அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தனர்.தனியார் நிர்வாக ஒதுக்கீட்டில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலை இணைப்பில்உள்ள தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, செப்., 1ல், வகுப்புகள் துவங்க உள்ளன.சில கல்லுாரிகள், செப்., ௪ல் வகுப்புகளை துவக்குகின்றன. செப்., ௨ல் பக்ரீத் பண்டிகை; செப்.,௩ ஞாயிறு என்பதால், பல கல்லுாரிகள், செப்., ௪ல் பெற்றோருக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளன. முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லுாரிகள் சார்பில், அலைபேசி, எஸ்.எம்.எஸ்., இ-மெயில் வழியாக தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

முதல் நாளில், மாணவர்களையும், பெற்றோரையும் வரவழைத்து, வழிகாட்டும், 'ஓரியன்டேஷன்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மறுநாள் கல்லுாரி வளாகம், ஆய்வகம், வகுப்புகள் சுற்றி காட்டப்பட்டு, பேராசிரியர்கள், மூத்த மாணவர்களின் அறிமுகம் நடக்கும். அதன்பின், வகுப்புகள் முறையாக துவங்க உள்ளதாக, கல்லுாரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot