நவோதயா பள்ளிகுறித்து தமிழக அரசின் நிலை என்ன? நீதிமன்றம் கேள்வி! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 29 August 2017

நவோதயா பள்ளிகுறித்து தமிழக அரசின் நிலை என்ன? நீதிமன்றம் கேள்வி!

குமரி மகா சபையின் செயலர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கல்விக்காக, தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவுசெய்ய வேண்டியதுள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும்,  இந்தப் பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகின்றன. ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. இவ்வகைப் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசு  போதிய இடங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு, இந்தப் பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நவோதயா பள்ளிகுறித்து தமிழக அரசின் நிலையை, தமிழக அரசிடம் கேட்டுத் தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot