தமிழக
அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பணியில் உள்ள
பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகும் நிலையில் உள்ளது.
TNTET கடைசி வாய்ப்பு என
கடந்த வாரம் வந்த கல்வித் துறையின் சுற்றறிக்கையால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள
ஏற்கனவே பல முறை,
பல வழிகளில் மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவரது மேலான கவனத்திற்கு கொண்டு சென்று இருந்தனர். மாண்புமிகு கல்வி அமைச்சரும் விரைவில் நல்ல தீர்வு தரவும் உறுதி அளித்து இருந்தார்.
எதிர்பார்ப்புடன்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 23/08/2010 ற்குப் பிறகு பணிநியமனம் பெற்றவர்கள் இன்று வரை காத்துக் கொண்டு உள்ளனர்.
மிக மனம் வருந்தும் நிலை இதில் யாதெனில் ஆறு வருடங்களுக்கு மேலாக பணியில் ஜொலித்த இவர்கள் தகுதியற்ற ஆசிரியர்கள் என முத்திரை குத்தப்பட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப் படுவார்களோ என்ற அச்சத்திலேயே தினம் தினம் வாழ்க்கையைக் கடக்கின்றனர்.
இவர்களில்
பணியில் சேர்ந்த நாள்முதல் இன்று வரை மாணாக்கர்களின் படிப்பு,
நலன், அக்கறை, முன்னேற்றம், தேர்ச்சி, ஒழுக்கம்,நெறி சார்ந்த அணுகுமுறை.... போன்றவைகளில் சுணக்கம் இன்றி பணி புரிந்தும் வருகின்றனர்.
"அ முதல் ஃ வரை...!
கற்பித்தலுடன் சேர்த்து
அரசு அவ்வப்போது கொடுக்கும் பணியிடைப் பயிற்சிகள் முலம் மாணாக்கர்களுக்கு தேவையானவற்றை மிகுந்த உற்சாகத்துடனும் பணி புரிந்து வருகின்றனர்.
கல்வி மற்றும் பள்ளி சார்ந்த அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து தேர்ச்சி சதவீதமும் உயர்த்தி கடந்த 4 முதல் 6 ஆண்டுகளாக பணியில் உள்ள இந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வை காரணம் காட்டி தகுதியற்ற ஆசிரியர்கள் என முத்திரை குத்தி வெளியேற்றிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என யோசிக்கவும், மன சங்கட சூழலையும் சற்றே உள்ளார்ந்து சிந்தித்து தமிழக அரசால் இவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
கடந்த வாரம் வெளிவந்த கல்வி துறை இயக்குனர் அவர்களின் செயல்முறைகளின் படி விரைவில் கட்டாயத் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற சுற்றறிக்கை மேலும் காயப்படுத்தியுள்ளது.
இந்த ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு வேண்டி TNTET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு கோரிக்கைகளை அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் வாயிலாக பலமுறை வைத்து இருந்து உள்ளனர்.
TNTET கடைசி வாய்ப்பு என்ற கட்டாயத்தால் கழுத்தில் கத்தி உள்ளது போல தினம் தினம் இறுக்கமான சூழலில் மிகவும் வேதனையில் அரசு பொதுத் தேர்வுகள் , விடைத்தாள் திருத்தம், தேர்தல் பணி, பணியிடைப் பயிற்சிகள்.... இவற்றையும் சேர்த்து பள்ளிக் கல்விப் பணியும் புரிந்து வருகின்றனர்.
இவர்களின் நிலை பற்றிய செய்திகள் அவ்வப்போது தொலைக்காட்சி, செய்தித்தாள், மின் ஊடகங்கள் வழியாக வந்தாலும் அரசியல் தலைவர்கள் , கல்வி அதிகாரிகளின் கவனத்தில் கொண்டு செல்லவும், எவரும் கண்டுகொள்வதும் இல்லை என்பதுடன், ஆறுதல் கூறக் கூட ஆட்கள் இல்லை என்பது இவர்களின சொல்ல இயலாத துயரம்.
இவ்வளவு காலம் பட்டதாரி ஆசிரியர்களாக சிறப்பாக பணி புரிந்தும் முறையான அங்கீகாரம் இல்லாதது போல இன்று வரை பயணிக்கும் இந்த ஆசிரியர்கள் பல வழிகளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு உதவ பல அரசு உதவி பள்ளி நிர்வாகங்கள் முன் வருவது இல்லை.
வளரூதியம், ஊக்க ஊதியம், விடுப்புகள், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு....போன்ற பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்கள் பணியில் உள்ளனர்.
TNTET நிபந்தனை ஆசிரியர்க் குடும்பங்கள் வாழ்வாதாரம், பணிப் பாதுகாப்பு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து ஏற்கெனவே சிறுபான்மையினர் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல இவர்களுக்கும் விலக்கு அளித்து, ஒரு நல்ல முடிவினை தற்போது தமிழக அரசு எடுக்கும் பட்சத்தில் அரசிற்கு முழுவதும் நன்றிக்கடன் பற்று இருப்பார்கள் என்பது உண்மை.
இந்த பட்டதாரி ஆசிரியர்கள் நிலையை நல்உள்ளத்துடன் பார்க்க முற்பட்டு விரைவில் தீர்வு கண்டால் இனிவரும் நாட்களிலாவது நிம்மதியுடன் ஆசிரியப் பணியை அறப்பணியாக மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.
ஆகவே எதிர் வரும் சட்டமன்றக் கூட்டத்திலேயே மாண்புமிகு கல்வி அமைச்சர் கருணையுடன், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட அனைவருக்கும் TNTET லிருந்து முழுமையான விலக்கு அறிவித்து நல்ல முடிவைத் தர வேண்டும் என தமிழக TET நிபந்தனை ஆசிரியர்கள் குழுமம் கேட்டுக் கொள்கிறது.