​புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு?​ - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 11 October 2017

​புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு?​

​புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு?​

புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு  இருக்கும்...

1.1.2016 அன்று ஊழியர்கள் பெற்றிருந்த அடிப்படை ஊதியமும், தர ஊதியமும் சேர்ந்தது 100%. அன்றைய தேதியில் தரப்பட்டிருந்த அகவிலைப் படி 125%.


ஊதியம் + அகவிலைப் படியின் கூட்டுத் தொகை 225%.

ஏழாவது ஊதியக் குழு, தனது பரிந்துரையில் 14.29 சதவிகித உயர்வை வழங்கியுள்ளது.

 அதன்படி, 225 சதவிகிதத்தில் 14.29% உயர்வு என்பது 32% ஆகும்.

 அப்படியானால் 100+125+32 = 257%.

இதுதான் அனைவருக்கும் பொதுவான ஊதிய நிர்ணயமுறை.

இந்த 257 சதவிகிதம்தான் 2.57 மடங்கு எனக் குறிப்பிடப்படுகிறது.

 எனவே, 1.1.2016 அன்று பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி, பெருக்கி வரும் தொகையை ரூ.100-ன் மடங்குகளில் அமைத்து, ஊதிய நிர்ணய அட்டவணை ஒன்று அமைந்துள்ளது.

 இதன்படி நிர்ணயம் செய்யப்படுவதே ‘உண்மை ஊதியம்’ என்று சொல்லப்படும் அடிப்படை ஊதியமாக இருக்கும்.

1.1.2016-க்குப் பிறகு தர ஊதியம் கிடையாது.

​ஊதிய உயர்வு​

வருடத்துக்கு ஒருமுறை ஊழியர்களுக்கு தரப்படும் ஊதிய உயர்வானது, 1.1.2016-க்கு முன்பு இருந்த ஊதியம் + தர ஊதியத்தின் கூட்டுத் தொகையில் மூன்று சதவிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.10-ன் மடங்குகளில் இருந்தது.

01.01.2016-ல் தர ஊதியமானது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டதால்,      1.1.2016-க்குப் பிறகு தரப்படும் ஊதிய உயர்வானது அடிப்படை ஊதியத்தில் மூன்று சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.100-ன் மடங்குகளாக இருக்கும்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot