கல்வி உதவித்தொகை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 17 October 2017

கல்வி உதவித்தொகை

தொழிலாளர் வாரிசுகள், கல்வி உதவித் தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வாரிசுகளுக்கு,
தொழிலாளர் நல வாரியம் வழியாக, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, பிளஸ் 1 முதல், கல்லுாரி படிப்பு வரை, புத்தகங்கள் வாங்க நிதி; தொழிற்கல்வி, பட்ட மேற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகை; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்தோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை - 6' என்ற முகவரிக்கு, சுயவிலாசமிட்ட, தபால்தலை ஒட்டிய உறையுடன், அக்., 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், தகவல்களுக்கு, 2432 1542 என்ற தொலைபேசி எண்ணிலும், www.labour.tn.gov.in என்ற இணைய தள முகவரியிலும், தெரிந்து கொள்ளலாம். இத்திட்டங்கள், தொழிலாளர் நல நிதி செலுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot