வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 26 October 2017

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடி யாக அப்புறப்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்காலத்தின்போது பள்ளிகளில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துகள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. மின்கசிவினாலும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் காயமடைவதுடன் சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் இந்த ஆண்டு ஏற்படாமல் தவிர்க்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறுபள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:பள்ளி வளாகங்களில் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்த நிலையிலும் பல கட்டிடங்கள் காணப்படுகின்றன. மழைகாலத்தில் இதுபோன்ற கட்டிடங்கள் இடிந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்த சம்பவங்களும், உயிரிழப்புகளும் முந்தைய காலங்களில் ஏற்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் நீண்ட காலமாக அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கின்றன.

கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் அந்த கட்டிடங்கள் காரணமாக உள்ளன. எனவே, இதையெல்லாம் கவனத்தில்கொண்டு பழைய கட்டிடங்களை உடனடியாக அப்புறப் படுத்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் உதவியை நாட வேண்டும்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக இருப்பின் வட்டார வளர்ச்சி அதிகாரிகளையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக இருந்தால் பொதுப்பணித் துறை அதிகாரி களையும் பழைய கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறுஉத்தரவிட வேண்டும். இந்த விஷயத்தில் மாவட்டஆட்சியர்களுடன் தொடர்பில் இருந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, பருவ மழையால் பள்ளி வளாகங்களில் எந்தவிதமான விபத்துகளும் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அனைத்து பள்ளிகளிலும், கட்டிடத்தின் உறுதியை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.மழைநீர் ஒழுகும் கட்டிடங்களை பயன்படுத்தக் கூடாது.பாழடைந்த கட்டிடங்களை, அரசின் அனுமதி பெற்று இடிக்க வேண்டும். மின் உபகரணங்களை ஆய்வு செய்து, மின் கசிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும். கீழேவிழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.பள்ளியில், அவசர தேவைக்கு, முதலுதவி மருந்துவைத்திருக்க வேண்டும்.பள்ளி அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்றவற்றின் தொலைபேசி எண்களை, பள்ளி வளாகத்தில் எழுதி வைக்க வேண்டும்.ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகில் செல்லவோ, அவற்றில் குளிக்கவோ கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று தொடக்கக்கல்வி இயக்குநர் எஸ்.கார் மேகமும் அனைத்து தொடக்கப்பள்ளிகள்மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் அறிவுரைகள் வழங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot