ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 4 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 29 November 2017

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 4

மரபு கவிதை தொடர்புடையவை:
1. கண்ணதாசன்
2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
3. சுரதா


கண்ணதாசன்
வாழ்க்கைக் குறிப்பு:

இயற்பெயர் - முத்தையா
ஊர்: இராமநாதாபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டு (தற்போது சிவகங்கை மாவட்டம்)
பெற்றோர் - சாத்தப்பான் -விசாலட்சுமி
காலம்: 1927 - 1981

புனைப்பெயர்:
-காரை முத்துப் புலவர்
-வணங்காமுடி
-பார்வதிநாதன்
-துப்பாக்கி
-ஆரோக்கியசாமி
-கமகப்பரியா
-ஆரோக்கியசாமி

வேறு பெயர்கள்:
-கவியரசு
-கவிச்சக்கரவர்த்தி
-குழந்தை மனம் கொண்ட கவிஞர்

படைப்புகள்:
-மாங்கனி
-ஆட்டனத்தி ஆதி மந்தி
-கல்லக்குடி மகாகாவியம்
-கவிதாஞ்சலி
-பொன்மலை
-அம்பிகா
-அவகுதரிசனம்
-பகவாத் கீதை விளக்கவுரை
-ஸ்ரீகிருஷ்ணகவசம்
-அர்த்தமுள்ள இந்துமதம்
-பரிமலைக் கொடி
-சந்தித் தேன் சிந்தித்தேன்
-அனார்கலி
-தெய்வதரிசனம்
-பேனா நாட்டியம்
-இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காவியம்)

புதினங்கள்:
-ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி
-வேலங்குடி திருவிழா
-சேரமான் காதலி

இதழ்:
-தென்றல்
-கண்ணதாசன்
-சண்டமாருதம்
-முல்லை
-தென்றல் திரை
-கடிதம்
-திருமகள்
-திரை ஒளி
-மேதாவி
-தமிழ் மலர்

குறிப்பு:
-திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல் எழுதியுள்ளார்.

-இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த "கண்ணே கலைமானே" பாடலாகும்.

-சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்

-பாடல்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல்

சிறப்பு:
-தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
-செளந்திரா கைலாசம்- தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை அவன்

மேற்கோள்:
- காலைக் குளித்தெழுந்து
 கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
 கருநாகப் பாம்பெனவே
 கார்கூந்தல் பின்னலிட்டு

- போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்

- வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

- மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?

- "செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்" என்று பாடியவர் - கண்ணதாசன்

- கம்பர்-அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் - இராச தண்டனை

- சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் வரலாற்றுப் புதினம் - "சேரமான் காதலி"


2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
- பெற்றோர்: அருணாசலம் - விசாலாட்சி தம்பதியருக்கு இளைய மகன்

- ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு


முகப்பு  வேலைவாய்ப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 4
By வெங்கடேசன்.ஆர்  |   Published on : 25th November 2017 03:16 PM  |   அ+அ அ-   |
- காலம்: 13.04.1930 - 08.10.1959

- மனைவி: கெளரவாம்பாள்

- குழந்தை: 1959-ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. அவருக்கு குமரவேல் என பெயர் சூட்டப்பட்டது. அதே ஆண்டு கல்யாண சுந்தரம் மரணம் அடைந்தார்.

- படிப்பு: பள்ளிப்படிப்பு மட்டுமே

- இவர் எழுத்திய மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 56

- இவரை "மக்கள் கவிஞர், பொதுவுடமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்" எனப் போற்றுவர்.

- உடுமலை நாராயணகவி இவரை "அவர் கோட்டை நான் பேட்டை" எனப் புகழ்ந்தார்.

- செய்யும் தொழிலே தெய்வம் என்று பாடினார்.

- 1955-ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

- "கையும் காலுந்தான் உதவி, கொண்ட கடைமைதான் நமக்குப் பதவி" என்று கூறினார்.

- "பயிரை வளர்த்தால் பலனாகும் - அது உயிரைக் காக்கும் உணவாகும்" என்று பாடினார்.

- "வெயிவே நமக்குத் துணையாகும் - இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்" என்று கூறினார்.

- ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.

- எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.

- இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

- திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

- நடிப்பாசையின் காரணமாக "சக்தி நாடக சாபா"வில் இணைந்தார்.

- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்க அரசு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மணிண்டபம் அமைத்துள்ளது. அங்கு அவரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.

3. சுரதா
வாழ்க்கைக் குறிப்பு:
இயற்பெயர்: இராசகோபாலன்

ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் பழையனூர் (சிக்கல்)

பெற்றோர்: திருவேங்கடம், சண்பகம் அம்மையார்

படிப்பு: பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார்.

மனைவி: சுலோசனா

மகன்: கல்லாடன்; மருமகள்: இராசேசுவரி கல்லாடன்

பேரக்குழந்தைகள்: இளங்கோவன், இளஞ்செழியன்

- சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
காலம்: 23.11.1921 - 19.06.2006

சிறப்புப்பெயர்கள்:
- உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)

- கவிஞர் திலகம் (சேலம் கவிஞர் மன்றம்)

- தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)

- கலைமாமணி (தமிழக இயலிசை நாடக மன்றம்)

- கவிமன்னர் (கலைஞர் கருணாநிதி)

படைப்புகள்:
- தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு 1986)
- சிரிப்பின் நிழல் (முதல் கவிதை)
- சாவின் முத்தம்
- உதட்டில் உதடு
- பட்டத்தரசி
- சுவரும் சுண்ணாம்பும் - 1974
- துறைமுகம் - 1976
- வார்த்தை வாசல்
- எச்சில் இரவு
- அமுதும் தேனும்
- தொடா வாலிபம்

கட்டுரை: "முன்னும் பின்னும்"

இதழ்:
- சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச் மாதம் வெளியிட்டார்.

- 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார்.

- 1954-இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.

- 1955- இல் காவியம் முதல் கவிதை என்ற வார இதழைத் தொடங்கினார்.

- இவ்விதழைத் தொடர்ந்து மாத இதழாக இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

- 1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).

குறிப்பு:
- பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

- தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.

மேற்கோள்:
- தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்

- "தடைநடையே அவர் எழுத்தில் இல்லை
வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கல் உண்டு"

- படுக்கவைத்த வினாக்குறி போல்
மீசை வைத்த பாண்டியர்கள்

- வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
எதுகை வரப் போல் அடுத்து வந்தால், அத்தி
என்பானணோ மோனையைப் போல் முன்னை வந்தான்

- திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் - கு.ச.கிருட்டிணமூர்த்தி

- 1944-ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார்.

- சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

- பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966-இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

சிறப்பு:
- செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்

- தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசை பெற்றவர்

- வ.ரா(வ.ராமசாமி) மாற்றொரு பாரதி பிறந்து விட்டான்

- 1969-இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.

- 1972-இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.

- 1978-இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.

- தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).

- 1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.

- 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.

- 1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.

- 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.

- 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.

- சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.

- 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.

- சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

- சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

- இவர் தன்னுடைய 84-ஆம் வயதில் 20.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.


தொடரும்....

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot