- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 28 November 2017

நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் 


தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்புகுடிநீர் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.


                          நிகழ்ச்சியில்  பள்ளி மாணவர்  அஜய் பிரகாஷ் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் மாணவர்களுக்கு  நிலவேம்புகுடிநீர் கசாயத்தை மாணவர்களுக்கு  வழங்கினார் . பள்ளி  மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் தேவகோட்டை நகராட்சி சார்பில் நிலவேம்புகுடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளது.டெங்கு தடுப்பு முறைகள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே வரும் முன் காக்கும் வகையில் இந்த நிலவேம்பு குடிநீர்கசாயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பல்வேறு முக்கிய நோய் பதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.மாணவர்கள் அனைவருக்கும்,ஆசிரியர்களுக்கும் நிலவேம்புகுடிநீர் வழங்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் தொடர்ந்து நான்காவது முறையாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 நிறைவாக மாணவி ஜெனிபர்   நன்றி கூறினார்.

 பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நிலவேம்பு குடிநீர் கசாயம் அருந்தும் மாணவர்கள்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot