வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 2 November 2017

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.


இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாலச்சந்திரன், இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 2 தினங்களைப் பொறுத்தவரை தென்  தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன மழையைப் பொறுத்தவரை..
தென் தமிழகம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மீனவர்கள் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோர பகுதிகளுக்குச் செல்லும் போது கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழையை எதிர்பார்க்கலாம்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot