ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 9 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 11 December 2017

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 9

இந்த பதிவில் தமிழ் - இலக்கணம் குறித்து பார்ப்போம்.

* தமிழ் மொழியில் உள்ள மிகப்பழமையான இலக்கணநூல் - தொல்காப்பியம்
* தொல்காப்பியத்தைச் சார்ந்து எழுந்த இலக்கணநூல்  - நன்னூல்

* நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் (காலம் 12, 13 கி.பி.நூற்றாண்டு)
* நன்னூலில் உள்ள நூற்பாக்கள் - 462
* நன்னூலின் வேறு பெயர்கள் - சிற்றதிகாரம், சின்னூல், பின்னூல்
* நூல்கள் மூவகைப்படும் (அகத்தியம்-முதல் நூல், தொல்காப்பியம்-வழிநூல், நன்னூல்-சார்பு நூல்(புடை நூல்)
* எழுத்திலக்கணம் எத்தனை வகைப்படும் - பன்னிரண்டு
* மனிதர்களைப் போல எழுத்துக்களுக்கும் நட்பும், இனமும் உண்டு.
* நட்பு எழுத்துக்களை இன எழுத்துக்கள் என மரபிலக்கணம் கூறுகிறது.
* எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை. முதல் எழுத்து, சார்பெழுத்து

* முதல் எழுத்துக்கள் - 30 (உயிரெழுத்து - 12, மெய்யெழுத்து - 18)
* சார்பெழுத்துக்கள் - 10
* தமிழ் எழுத்துக்கள் மொத்தம் - 247
* குறில் எழுத்துக்கள் - 5, நெடில் எழுத்துக்கள் - 7
* உயிர்மெய் குறில் எழுத்துக்கள் - 90.
* உயிர்மெய் நெடில் எழுத்து - 126
* மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். (வல்லினம்-6, மெல்லினம்-6, இடையினம்-6)
* தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துக்கள் - உடனிலைமெய்மயக்கம்
* ர, ழ - என்னும் இரண்டு மெய்களும் தம்முடன் தான் மயங்காது.
* தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்கள் - வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

* ஆய்தம் சார்பெழுத்து வகையைச் சேர்ந்தது.
* உயிர்மெய் எழுத்துக்கள் சார்பெழுத்து வகையில் அடங்கும்.
* ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அக்கேணம் என்பவன.
* ஆய்த எழுத்து ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
* சுட்டுப்பொருளை உணர்த்தும் எழுத்துக்கள் - சுட்டு எழுத்துக்கள்.
* சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை தருவது - அகச்சுட்டு (எ.கா. அவன், இவன்)

தொடரும்...

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot