TET - ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு 13 ஆயிரம் வேலைவாய்ப்புகள் - செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 5 February 2018

TET - ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு 13 ஆயிரம் வேலைவாய்ப்புகள் - செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி்க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.33 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல்நாட்டினார்.
பின்னர் செய்தியாளா்கள் சந்திப்பின் போது பேசிய அவர், 2013ஆம் ஆண்டு வெயிட்டேஜ் உள்ளவா்களுக்கும் இப்பொழுது புதிதாக வரக்கூடியவா்களுக்கும் எப்படி அதை பரிசீலிப்பது என்று அரசு கோப்புகள் நகா்ந்து கொண்டுள்ளது. மிகவிரைவில் அதற்கான நல்லமுடிவுகள் மேற்கொள்ளப்படும். 13 ஆயிரம் வேலைவாய்ப்பு என்பது படிப்படியாக எங்கெங்கே ஆசரியர் காலிப்பணியிடங்கள் வருகிறதோ அங்கு நிரப்பப்படும்.

நீட்தேர்வில் விலக்கு வேண்டும் என்று தொடா்ந்து அந்தமுயற்சிகளை நாம் மேற்கொண்டுவருகிறோம் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கையும் துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

+1 பொதுத்தோ்வு என்பது தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த பணிகளில் தற்போது விடைத்தாள்கள் சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆசிரியா்களுக்கு எப்படி வருகிறது என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையனுக்கு அரசியல் தெரியாது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருந்த கருத்துக்கு  பதிலளித்த அமைச்சா் செங்கோட்டையன் யார் கேட்கின்ற கேள்விக்கும் யார் சொல்கின்ற கேள்விக்கும் நான் பதில் சொல்வது வழக்கம் இல்லை. அவர்கள் ஏதோ கருத்துக்களை சொல்லிக் கொண்டுடிருப்பார்கள், அதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் என் துறையின் வளா்ச்சி என்பது மங்கிப்போய்விடும் என்று தெரிவித்தார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot