மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் ‘கியூசெட்’ தேர்வுக்கு மார்ச்26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 8 March 2018

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் ‘கியூசெட்’ தேர்வுக்கு மார்ச்26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழகம், கேரளா, அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு, காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான் , பீகார் போன்ற இடங்களில் மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பல்கலைக்கழங்களில் உள்ள பல்வேறு படிப்புகளுக்கு 'சென்ட்ரல் யுனிவர்சிட்டிஸ் காமன் என்ட்ரஸ் டெஸ்ட்' எனப்படும் 'கியூசெட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதே தேர்வின் மூலம் பெங்களூரு டாக்டர் அப்பேத்கர் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் கல்வி மையத்திலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். தற்போது இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

பி.பி.ஏ., பி.எஸ்சி., அப்ளைடு சைகாலஜி, ஜியோகிராபி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, எம்.டெக் மெட்டீரியல் சயின்ஸ் உள்ளிட்ட பல படிப்புகள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன. மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் இந்தத் தேர்வுக்கு மார்ச் 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 28,29-ந் தேதிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை www.cucetexam.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot