சமவேளைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள டிபிஐ வளாகம் முன்பு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சட்டியுள்ளன
எனவே ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.