ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் குழுவிடம் அளிக்கலாம் : தமிழக அரசு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 2 May 2018

ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் குழுவிடம் அளிக்கலாம் : தமிழக அரசு

ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் சித்திக் குழுவிடம் மே 15ம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையி்ல் தொடர்ந்து 4 நாட்களாக போராட்டம் நடத்திய நிலையில் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை நேரிலும், தபாலிலும், omc_2018@tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் அளிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மே 15ம் தேதிக்குள் ஒரு நபர் குழுவிற்கு மனுக்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஊதிய முரண்பாடுகளை களைய எம்.ஏ.சித்திக் அரசு செயலாளர் நிதித்துறை தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot