தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு தொடங்கக் கோரி வழக்கு : அரசு பதில் தர நோட்டீஸ் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 2 May 2018

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு தொடங்கக் கோரி வழக்கு : அரசு பதில் தர நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி  போன்ற மழலையர் வகுப்புகளை தொடங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,
பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின்தலைவர் வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 2014-15 கல்வியாண்டு முதல் எல்.கே.ஜிமற்றும் யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகள் தொடங்க முடிவு ெசய்யப்பட்டன. அதன் அடிப்படையில், ெசன்னை மாநகராட்சியில் உள்ள 281 பள்ளிகளில் 200 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வகுப்புகளில் கடந்த  2016-17ம் ஆண்டில் மட்டும் 88 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதேபோல்  தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை  தொடங்கினால் தனியார் பள்ளிகளில் சேர்வதை பெற்றோர்கள் தவிர்ப்பார்கள். அரசே தரமான கல்வியை வழங்க முடியும். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜிவகுப்புகளை தொடங்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியில் மட்டும்  செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். கல்வி பெறும் உரிமை சட்டப்படி,  மழலையர் வகுப்புகள் தொடங்குவது குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம்என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு3 வாரங்களுக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot