‘நீட்’ தேர்வுக்கு நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்குநர் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 23 November 2018

‘நீட்’ தேர்வுக்கு நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்குநர்


மருத்துவ படிப்பில் சேர விரும் பும் அனைத்து மாணவ-மாணவி களையும் ‘நீட்’ நுழைவுத் தேர் வுக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அறிவு றுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கல்வி அதிகாரி களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அடுத்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

‘நீட்’ தேர்வுக்கு நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் படி மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவ - மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் தங்கள் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ - மாணவிகளைக் கண்டறிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட் டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் கூடுதலாக சிறப்பு கவனம் செலுத்தி ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

பிற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் அனைத்து மாணவ - மாணவி களும் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப் பித்துள்ளார்களா என்பதை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக உறுதி செய்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot