புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ கடந்த மாதம் 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.
அந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என லோகநாதன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த 3-ந் தேதி அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதுவரை அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதையடுத்து அவர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள், ஊதிய முரண்பாடுகளை களைவது, 21 மாத நிலுவைத்தொகை வழங்குவது தொடர்பான சித்திக் கமிட்டியின் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளையும், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் 11-ந் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ கடந்த மாதம் 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.
அந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என லோகநாதன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த 3-ந் தேதி அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதுவரை அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதையடுத்து அவர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள், ஊதிய முரண்பாடுகளை களைவது, 21 மாத நிலுவைத்தொகை வழங்குவது தொடர்பான சித்திக் கமிட்டியின் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளையும், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் 11-ந் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment