BREAKING NEWS : திட்டமிட்டபடி வருகின்ற 22 தேதி வேலை நிறுத்தம் -ஜாக்டோ ஜியோ முடிவு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 11 January 2019

BREAKING NEWS : திட்டமிட்டபடி வருகின்ற 22 தேதி வேலை நிறுத்தம் -ஜாக்டோ ஜியோ முடிவு!


இன்று(11.01.2019) பிற்பகல் 2.30 மணியளவில் ஜாக்டோ-ஜியோ வழக்கு மதுரை நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.

அரசு இழுத்தடிக்கும் நோக்கில் இழுத்தடிப்பு செய்ததால் எந்தவித அறிவிப்பும் நீதிமன்றம் அறிவிக்காமல் தள்ளி வைத்துள்ளது.

எனவே திட்டமிட்டபடி 22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

*ஜாக்டோ ஜியோ மதுரை உயர்நீதிமன்ற வழக்கு முடித்து வைக்கப்பட்டது.*


 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை செய்த பின் இனி அரசுக்கு எவ்வித  கால அவகாசமும் தர முடியாது .


நாங்கள் ஏற்கனவே போராட்டம் அறிவித்து இரண்டு முறை தள்ளி வைத்து, அரசாங்கமும் இந்த நீதிமன்றத்தில் இரண்டு முறை வாய்தா பெற்று விட்டது .



இனி எங்களுக்கு உடனடியாக எங்கள் கோரிக்கைகள் மீது முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் எங்களது சார்பாக வழக்கிலிருந்து விலகிக் கொள்கிறோம் என்று வாதத்தை வைத்தனர்.


 நீதி அரசர்கள் வழக்கை முடித்து வைத்து அனுப்பிவிட்டனர் மொத்தத்தில் இவ்வழக்கு முடிவுற்றது. ஜாக்டோ ஜியோ போராட எந்த தடையும் இல்லை .


முழுவீச்சோடு வருகிற இருபத்திரண்டாம் தேதி போராட்டம் தொடங்குகிறது..


No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot