கேரளத்தில் கைத்தறியால் நெய்யப்பட்ட சீருடைகளை சுமார் 2.3 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளத்தில் நலிவடைந்து வரும் கைத்தறித் துறையை மேம்படுத்தும் நோக்கில், பள்ளி மாணவர்களுக்கு கைத்தறியிலான சீருடைகளை வழங்குவது என மாநில அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் கைத்தறிச் சீருடைகள் தயாராகி வரும் "ஹேண்டெக்ஸ்' எனப்படும் கைத்தறித் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கத்துக்கு மாநில தொழில் துறை அமைச்சர் ஏ.சி.முகைதீன், மாநில கல்வித் துறை அமைச்சர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் சனிக்கிழமை வந்தனர்.
ஆய்வுக்குப் பின் அமைச்சர் முகைதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடப்புக் கல்வியாண்டில் மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 2.3 லட்சம் மாணவர்களுக்கு கைத்தறியிலான சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் வரும் 22-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்றார் அவர்.
கேரளத்தில் நலிவடைந்து வரும் கைத்தறித் துறையை மேம்படுத்தும் நோக்கில், பள்ளி மாணவர்களுக்கு கைத்தறியிலான சீருடைகளை வழங்குவது என மாநில அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் கைத்தறிச் சீருடைகள் தயாராகி வரும் "ஹேண்டெக்ஸ்' எனப்படும் கைத்தறித் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கத்துக்கு மாநில தொழில் துறை அமைச்சர் ஏ.சி.முகைதீன், மாநில கல்வித் துறை அமைச்சர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் சனிக்கிழமை வந்தனர்.
ஆய்வுக்குப் பின் அமைச்சர் முகைதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடப்புக் கல்வியாண்டில் மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 2.3 லட்சம் மாணவர்களுக்கு கைத்தறியிலான சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் வரும் 22-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்றார் அவர்.
No comments:
Post a Comment