'கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வர அரசு தயார்'-பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday, 12 May 2017

'கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வர அரசு தயார்'-பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

''கல்வித்துறையில், யார், எந்த கருத்துக்களை கூறினாலும், அதையேற்று, மாற்றங்களை கொண்டு வர, தமிழக அரசு தயாராக உள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:தமிழக அரசு, கல்வித்துறையில், பல திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக, செயல்படுத்தி வருகிறது. அதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வில், சென்ற ஆண்டை விட, 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில், ஒட்டு மொத்த மாணவர்கள் தேர்ச்சி, 92.1 சதவீதம் என்பது, தமிழக வரலாற்றில் முதன்முறை. தமிழக சட்டசபை, விரைவில் கூட உள்ளது. அப்போது, ஸ்டாலின் அவரது கருத்துக்களை கூறலாம். கல்வித்துறையில், யார் எந்த கருத்துக்களை கூறினாலும், அதையேற்று, பல்வேறு மாற்றங்களை கொண்டு வர, அரசு தயாராக உள்ளது. கல்வித்துறை மானிய கோரிக்கையில், பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

6 comments:

  1. posting poduvingal sir? from already passed canditates. and when will you realize Tentative answer for TNTET 2017

    ReplyDelete
  2. தனியார் கையில் தாரை வார்த்துள்ள கல்வியை முழுமையாக அரசு எடுத்து நடத்த வேண்டும்.
    அனைவர் கும் கல்வி என்பது வெறும் பெயர் அளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும்.
    தனியார் பள்ளிகள் கூறும்
    சிறந்த ஆசிரியர்கள்,
    பாதுகாப்பான கட்டிடம்,
    சுத்தமான குடிநீர்,
    சுகாதாரமான கழிப்பிட வசதி,
    சரியாகபராமரிக்கப்படும்
    விளையாட்டுமைதானம்,நூலகம்,
    பாதுகாக்கப்பட்ட சூழல்
    இவை அனைத்தையும் அரசால் கொடுக்க முடியும். கொடுக்க வேண்டும்.
    இதற்கு நியாயமான கட்டணத்தை அரசு அனைவரும் ஏற்கும் வகையில் வசூல் செய்வதில் எந்த தவறும் இல்லை.

    ReplyDelete
  3. I'm also accept mr karak Marx comments.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. COMPUTER SCIENCE ..(B.ED)...TRB EXAM ..???????

    ReplyDelete
  6. 1. 11th should be a public exam
    2. appoint separate teachers for Commerce and Accountancy subject.
    3. from 9 to 12 SYLLABUS same as CBSE
    4. From 1 to 8 syllabus gives importance our tamilnadu history, geography. life science, tamil,,
    5. give promotion to college for eligible pg teachers.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot