முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 19 June 2017

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தமிழ்நாட்டில் எம்.டி., எம்.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழக அரசால் நடத்தப்பட்டது. இதில் 1066 இடங்களில் 999 இடங்கள் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
மேலும், அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையால் அரசு மருத்துவர்களுக்கே நிறைய சேர்க்கை இடங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை எதிர்த்து தனியார் டாக்டர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் முதுநிலை மருத்துவ சேர்க்கையில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணையும் ரத்து செய்த உத்தரவிட்டது. 3 கலந்தாய்வு பட்டியல்களையும் ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ முதுநிலை படிப்பிற்கு புதிய தகுதி பட்டியலை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. புதிய பட்டியல் அடிப்படையில் எம்.டி., எம்.எஸ்., படிப்பில் சேர மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ மேற்படிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot