'குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள்பெற்ற மாணவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதால், சிறப்பு வகுப்புகள் மூலம், விரைவில் பயிற்சி அளிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் குறைதீர் கற்றல் தேர்வு நடத்தப்படுகிறது.ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடத்தில்,தலா 45 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் இடம்பெறும்.இதில், 15 மதிப்பெண்களுக்கு கீழ், பெற்ற மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' மூலம், சிறப்பு பயிற்சிகள் அளிப்பது வழக்கம்.
இதன்மூலம், பத்தாம் வகுப்பில், பொதுத்தேர்வை எதிர்கொள்வதில், மாணவர்களுக்கு சிரமம் இருக்காது.நடப்பாண்டில், இம்மாத துவக்கத்தில், குறைதீர் கற்றல் தேர்வுகள், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நடந்தன. இதில், பின்தங்கிய மாணவர்களின் விபரங்கள், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. இவர்கள், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள், பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ளதால், சிறப்பு கையேடு தயாரித்து, வகுப்பு ஆசிரியர்கள் கொண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'சமச்சீர் கல்விமுறை அமலுக்கு வந்தபின், எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் செய்யப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பில், பாடத்திட்டத்தின் கடினத்தன்மையால், கற்றலில் பின்தங்கிய மாணவர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தி, ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில், இம்மாணவர்களுக்கு சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பயிற்சி வகுப்புகள் துவங்கும்' என்றனர்.
அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் குறைதீர் கற்றல் தேர்வு நடத்தப்படுகிறது.ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடத்தில்,தலா 45 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் இடம்பெறும்.இதில், 15 மதிப்பெண்களுக்கு கீழ், பெற்ற மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' மூலம், சிறப்பு பயிற்சிகள் அளிப்பது வழக்கம்.
இதன்மூலம், பத்தாம் வகுப்பில், பொதுத்தேர்வை எதிர்கொள்வதில், மாணவர்களுக்கு சிரமம் இருக்காது.நடப்பாண்டில், இம்மாத துவக்கத்தில், குறைதீர் கற்றல் தேர்வுகள், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நடந்தன. இதில், பின்தங்கிய மாணவர்களின் விபரங்கள், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. இவர்கள், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள், பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ளதால், சிறப்பு கையேடு தயாரித்து, வகுப்பு ஆசிரியர்கள் கொண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'சமச்சீர் கல்விமுறை அமலுக்கு வந்தபின், எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் செய்யப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பில், பாடத்திட்டத்தின் கடினத்தன்மையால், கற்றலில் பின்தங்கிய மாணவர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தி, ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில், இம்மாணவர்களுக்கு சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பயிற்சி வகுப்புகள் துவங்கும்' என்றனர்.